பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

277 0

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம், புதுக்கோட்டையில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம், புதுக்கோட்டை ஆகிய பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 69 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அடுத்தடுத்து சிறைபிடித்தது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம், புதுக்கோட்டையில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் மண்டபம் மடம் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் நாளை (23-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர்.