துருக்கி – இஸ்தான்புல் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் புதுவருட பிறப்பு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர்.
துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.