மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு 31 வரை விளக்கமறியல்!

306 0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 31ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர், சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று வெள்ளிக்கிழமை காணொளி மூலம் (17) உத்தரவிட்டார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை செங்கலடியில் உள்ள அவரது வீட்டில்வைத்து ஏறாவூர் காவல்துறையினர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் அவரை தொடர்ந்து எதிர்வரும் 31 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.