யாழ்.சென்ற பஸ் விபத்து: ஒருவர் பலி; 08 பேர் காயம்

226 0
மதவாச்சி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இக்கிரிகொல்லாவ இராணுவ கிராமத்தின் வீதியில் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் இக்கிரிகொல்லாவ போர் வீரர்கள் சந்தியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டபோது பஸ்ஸில் 46 பயணிகள் இருந்த அதேவேளை 8 பேர் காயமடைந்த நிலையில் அநுராதபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யப் பட்டுள்ளார்.
இவ் விபத்தில்  74 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.