மீசாலை புத்தூர்ச் சந்தியில், இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார்.
மீசாலை வடக்கைச் சேர்ந்த, கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான கந்தசாமி சுதாஸ்கரன் (வயது -35 என்பவரே உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர், வீதியைக் கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீதியில் காத்திருந்த போது, சாவகச்சேரி பகுதியிலிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் மோதியதில் விபத்து இடம்பெற்றது.