நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி இன்று மாலைக்குள் மின்வட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி மின் விநியோக முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இரண்டாவது மின்பிறப்பாக்கியும் புனரமைக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளரான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

