2020 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த ) பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறு வசதியான நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு செய்துக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்களும் மேற்படி நடைமுறையை பின்பற்றலாம். இவ்வாறான கோரிக்கைகளை பாடசாலை பரீட்சார்த்திகள் தமது அதிபர்கள் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த செயல்முறைப் பரீட்சைகள் நாடு தழுவிய ரீதியில் பரீட்சைகள் திணைக்களத்தினால் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களை 0112 784208 மற்றும் 0112 784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.