பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தமக்குப் பாதுகாப்பில்லை என கூறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களுக்கான சிற்றுண்டிச்சாலைக்கு மாத்திரம் எவ்வாறு வருகிறார்கள்? என ஆளுங்கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் மொஹமட் முஸாம்மில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தின் இன்றைய (06) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தில் பாதுகாப்பில்லை என கூறியே ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர். ஆனால் இன்று காலை அக்கட்சியின் எம்.பிகள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலைக்கு வந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என கூறுபவர்கள் எவ்வாறு பாராளுமன்ற
சிற்றுண்டிச்சாலைக்கு வந்தனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

