அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் மீண்டும் போராட்டத்தில்

259 0

Lottery Ballsஅதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் இன்று முதல் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

கொழுப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த அறிவித்தலை அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் சங்கம் விடுத்தது.

அதிஸ்ட இலாபச்சிட்டின் விலையை 20 ரூபா வரை குறைக்குமாறு கோரியே இந்த பணிநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிஸ்ட இலாபச்சிட்டுக்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில கேரிக்கைகளை முன்வைத்து இந்த மாதம் முதலாம் திகதி முதல் அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இன்று முதல் மீண்டும் பணப்புறகணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

அதிஸ்டலாபச் சீட்டின் விலையை 20 ரூபா வாக குறைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளனர்.