’சிலிண்டர்கள் இதனால்தான் வெடிக்கின்றன’

258 0

லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனத்தை விற்பனை செய்வதற்காகவே, நாட்டில் தற்போது சமையல் எரிவாயுக்கள் வெடிக்க வைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றை அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், சமையல் எரிவாயு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்த நிறுவனத்தை வேறு எவருக்காவது வழங்குவதற்கே தற்போது சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதனை அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.