பணம் வைத்து சூதாடிய எண்மர் கைது

131 0

கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரிப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர், இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சூது விளையாடிக் கொண்டிருந்த போது, பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 ஓட்டோக்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.