குச்சவௌி, நீலபனிக்கன்ராய் வாவி பிரதேசத்தில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
புல்மோட்டை காவல்துறை விசேட படையணி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் அடிப்படையில் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, 60 மில்லிமீற்றர் வகையான 4 மோட்டார் குண்டுகள், 89 மில்லிமீற்றர் வகையான 11 அருள் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவௌி காவல்நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட படையணியினர் தெரிவித்தனர்.