வென்னப்புவ – நயினமடுவ கடல் பகுதியில் சுமார் 50 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரரிகளால் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது படகில் இருந்த மூன்று பேர் தப்பிச்
சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.