தடைகளைத் தாண்டி முல்லையில் நினைவேந்தல்!

267 0

இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை முல்லை கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்டவேளை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன்பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.