இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தைத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இப்பூஜை வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக பல வெளிநாட்டவர்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.