தைப்பொங்கல் திருநாளையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடனான தைப்பொங்கல் கொண்டாட்டம் மற்றும் விசேட பூஸை வழிபாடுகள் இடம்பெற்றன.
சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகளில் சூரியகுமார் சௌகீச சர்மா வழிபாடுகளை நடாத்திவைத்தார்.
சிறைக்கைதிகளின் சேமநலநிற்காக பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் கைதிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.ஆன்மீக சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.
பிரதம ஜெயிலர் கே.பிரபாகரன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.