கொவிட் தொற்றால் மேலும் 24 பேர் மரணம்!

447 0

நாட்டில் மேலும் 24 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,182 ஆக உயர்வடைந்துள்ளது.

15 ஆண்களினதும், 9 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 3 ஆண்களும், பெண் ஒருவருமாக 4 பேர் மரணித்தனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 20 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவர்களில் 12 ஆண்களும், 8 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.