மாவீரர் நாள் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

307 0

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிஸார் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்க தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் போது பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சிலர் ஆஜராகி தடை உத்தரவை பிறப்பிக்க கூடாதென வாதம் செய்தனர்.

இதனை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.