யாழ் ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன(காணொளி)

338 0

uraniயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜான் கவலை வெளியிட்டுள்ளார்.

26 வருடங்களுக்கு முன்னர் ஊறணி அந்தோனியார் ஆலயத்தின் அருட்தந்தையாக பணியாற்றியவரும், தற்போது புலம்பெயர் நாட்டில் மதப்பணியாற்றிக் கொண்டிருப்பவருமான அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜன் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு குறுகியகால விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜன், ஊறணி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகைதந்து, பழைய மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜெய வழிபாட்டிலும் ஈடுபட்டார்.

ஊறணி மக்களால் உழைப்பின் மூலம் வியர்வை சிந்தி கட்டிய அந்தோனியார் ஆலயம், போர் நிறைவடைந்த பின்னர் எவ்வாறு தரைமட்டம் ஆக்கப்பட்டது என்பது அந்தோனியாரை வழிபட்ட மக்களால் பெருமூச்சுடன் கேட்கப்படுகின்ற கேள்வியாக இருக்கின்றது எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

மீண்டும் தரைமட்டம் ஆக்கப்பட்ட அந்தோனியார் அலயத்தை கட்டியெழுப்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.