ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கத் தீர்மானம் – ஞானசார தேரர்

174 0

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடை முறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக் களையும் கேட்டறியும் நிலையில், மக்களின் கருத்துக்களையும் உள் வாங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து யோ சனைகள், ஆலோசனைகளைக் கோரப்படுவதாக அவர் தெரிவித் துள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்கள் தமது கருத்துக்களை ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, செயலாளர், அஞ்சல் பெட்டி- 504, கொழும்பு என்ற முகவரிக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அனுப் பலாம் என்றும் ஒரு நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி வலியுறுத்துகிறது.