கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

156 0

தற்போது நிலவுகின்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன் கிழமை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக கடுமையாக மழை பெய்து வருவதனால் மாணவர்களின்
பாதுகாப்பு கருதி் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற வானிலையை  பொறுத்தே விடுமுறையை நீடிப்பதா   இல்லை என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் மாவட்டஅரச அதிபர் தெரிவித்துள்ளார்