கண்டி வைத்தியசாலையின் 65ம் இலக்க அறை மீண்டும் திறக்கப்பட்டது

242 0

1126568457Hosஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க கூறினார்.
அந்த வார்ட்டில் பரவியிருந்த வைரஸ்ள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். எவ்வாறாயினும் அந்த வார்ட்டுக்கு சிறு பிள்ளைகளை அழைத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

48 மணி நேரத்தில் 03 நோயாளர்கள் உயிரிழந்தமையின் காரணமாக நேற்று (11) முதல் 65ம் இலக்க நோயாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. வைத்தியசாலையின் குறித்த அறியில் வேகமாக பரவியம் ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க அத தெரணவிடம் கூறினார்.