ஊரெழு, பொக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை, நேற்று (01) காலை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட பொக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாகப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடம் முற்றுகை இடப்பட்டது.
இதன்போது காசி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் 20 லீட்டருக்குக்கும் மேற்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

