சிறிலங்கா நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு! Posted on October 30, 2021 at 15:10 by தென்னவள் 136 0 நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் இது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய , நவம்பர் 16 ஆம் முதல் சாதாரண தர, உயர்தர பிரத்தியேக (Tuition) வகுப்புகளை 50% திறனில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1/3 பங்கினருடன் கூட்டங்களை முன்னெடுக்கலாம். ஒரு நேரத்தில் உணவு விடுதிகளுக்குள் அதிகபட்சமாக 75 பேரும், வெளியே 100 பேரும் உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர் அறிவுறுத்தல்களின்படி, கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படும். திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மதச் சடங்குகள் போன்றவைகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்.