முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முல்லை பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
* முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது.
* கடந்த 28-ந்தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் 2 மதகுகள் திறக்கப்பட்டது.
* கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்பது தவறான தகவல்.
* முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.