ஹம்பாந்தோட்டை நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை!

278 0

1874048440untitled-1ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என, தன்னிடம் ஜனாதிபதி கூறினார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதன்போது மேலும் கூறியதாவது, நாட்டுக்கு தொழிற்சாலைகள் அவசியம். ஆனால் நாம் அந்த தொழிற்சாலைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆராயுமாரே கூறுகிறோம். சீனாவின் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமாயின் அதனை அகற்றுவோம்.

அதேபோல் பிறநாடுகளில் மறுக்கப்பட்டதாயின் அதுவும் எமக்கு வேண்டாம். அதனை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தருகிறார்கள் என அனைத்தையும் பெற வேண்டியதில்லை.

ஹம்பாந்தோட்டையில் கவலைக்குரிய விடயங்கள் நடைபெற்றன, என அவர் தெரிவித்துள்ளார்.