கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரிப்பு

300 0

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரித் துள்ளன.

அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பொருட்களின் ஏற்றுமதிகள் ஊடாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலையானது தற்போது 900 ரூபாவாகவும், கறுவா ஒரு கிலோகிராம் 3,400 ரூபாவாகவும், கிராம்பு ஒரு கிலோ கிராம் 1,400 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோப்பி 1,250 ரூபாவாகவும் ஒரு கிலோ பாக்கு 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
.