தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

186 0

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்படவும், மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபடவும் மத்திய அரசின் நடவடிக்கை அவசரம், அவசியம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல் இருக்கவும், மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபடவும் மத்திய, மாநில அரசுகள் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.