இலங்கைக்கு ஆபத்து..?

208 0

புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கபட்டுள்ளதுடன், துறைமுகங்கள் மீண்டும் செயற்படத்தொடங்கியுள்ளன.

எனவே, புதிய வைரஸ் வகைகள் நாட்டிற்குள் நுழைந்தால் கணிக்க முடியாததாக ஆபத்துக்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நாம் திருப்திகரமான நிலையை அடைய வேண்டுமானால், மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 80 சதவிகிதம் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.