மரமொன்று வீழ்ந்ததில் 14 சிறுவன் பலி!

229 0

ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொரவௌ வயல் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் 14 சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(16) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஹொரவ்பொத்தானை – துடுவௌ பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் சிறுவன் அமர்ந்திருந்தவேளை, மரம் வீழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தனை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.