குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

207 0

மொனராகலை, தம்பகல்ல, உடுமுல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (15) மாலை குறித்த இருவரும் குளத்தில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இருவரும் 14 வயதுடையவர்கள் என்றும் கொல்லாதெனிய தம்பகல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.