மொரட்டுவ, ஈகொட – உயன பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் 71 வயதான ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பத்துடன் தொடர்புடைய 26 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இன்றைய தினம் மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

