’பிரதமரின் மகன் எனக்கு சவால் இ்ல்லை’

141 0

வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு, வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது சவால் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை அவர்  தெரிவித்தார்.

எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் யோஷித ராஜபக்ஷ முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற வதந்தி மட்டுமே உள்ளது என்றும் அவர் போட்டியிடுவரா இல்லையா என்பது அன்றைய தினத்திலேயே தீர்மானம் செய்யப்படும் என்றும் குறிப்பட்டார்.

“வடமேல் மாகாண மக்கள் அன்றும் இன்றும் என்னை நன்றாக நடத்துகிறார்கள். எனவே, இந்த மாகாண சபைத் தேர்தலிலும் வடமேல் மாகாண மக்கள் என்னை நன்றாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று மேலும் தெரிவித்தார்.