கிளிநொச்சி சிவநகர் கிராம சனசமூக நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

298 0

kiliகிளிநொச்சி சிவநகர் கிராமத்திற்கான சனசமூக நிலையத்தை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

குறித்த சனசமூக நிலையம் ஏழு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நேற்றைய தினம் இரவு சிவநகர், கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வருகைக்கு எதிராக, தமிழத்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசாவின் முழு நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டு சிவநகர் சனசமூக திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும், சிவநகர் மக்கள் நன்றியுள்ள மக்கள் எனவும் போஸ்டர்கள் அடித்து, குறித்த பிரதேசமெங்கும் நேற்று இரவு ஒட்டியிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் தெரிவித்துள்ளனர்.

சிவநகர் மூத்த பிரஜைகள் சங்க தலைவர் இ.ரகுபதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், கரைச்சி பிரதேச சபையின் நூலகர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.