மின் கட்டண நிலுவையைச் செலுத்த ஒரு வருட சலுகைக் காலம்

243 0

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வாடிக்கையாளர்கள் நிலுவையிலுள்ள தமது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த ஒரு வருட சலுகைக் காலத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
கடந்த இரு மாதங்களுக்காக 44 பில்லியன் ரூபாவை மீட்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

கட்டணப் பட்டியலில் நிலுவை வைத்திருப்போர் 12 மாதங்க ளுக்குள் செலுத்தலாம் என்றும் இறுதிப் பட்டியல் அக்காலத்தினுள் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.