ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேர் கைது

212 0

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று (10) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பெலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதரிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது 36 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிக்கிராம், 38 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிக்கிராம், 39 வயதுடைய ஒருவரிடம் 110 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் அவர்களை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்நில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் நாளாந்தம் போதைப் பொருள், கஞ்சா, கசிப்புடன் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது