தேசிய சொத்துக்கள் விற்பனை – பாரிய மக்கள் போராட்டம்

289 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-4தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று உருவெடுக்கும் என என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சொத்துக்கள் மற்றும் மக்களின் உடமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் செயற்திட்டம் இன்று கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமானது.

இந்த விடயத்தை தெளிவுப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.