3 களஞ்சியசாலைகளுக்கு சீல்

229 0

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 4,5000 தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு, இன்று (07) சீல் வைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால், நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மூன்று நெல் களஞ்சியசாலைகளில் 4,5000 தொன் நெல்மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மூன்று நெல் களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.

பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.