திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் இரு கைக்குண்டுகள் மீட்பு!

195 0

அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் விவசாய காணி ஒன்றில்  கைவிடப்பட்ட இரண்டு கைக்குண்டுகளை நேற்று புதன்கிழமை (1) விசேட அதிரடிப்படையினரால் மீட்டு அவ்விடத்தில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று புதன்கிழமை (1) காலையில் குறித்த பகுதிக்கு சென்ற காவற்துறையினர் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பை ஒன்றில் இருந்து 2 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டனர்.

இவ்வாறு மீட்டகப்பட்ட கைகுண்டில் ஒன்று இந்திய தயாரிப்பும் மற்றது இலங்கை தயாரிப்புகள் எனவும் இதனை நீதிமன்ற அனுமதியை பெற்று அவ்விடத்திலே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த பகுதி விடுதலை புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது