தீர்மானிக்கும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் வழங்கவேண்டும் – எரான் விக்ரமரத்ன

138 0

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அரணை எம்மால் முன்கூட்டியே கட்டியெழுப்பமுடியாமல் போயுள்ளது. அதனால் இப்போது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது.

எனவே இனியேனும் ‘நாம் என்ன செய்யவேண்டும்?’ என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தொற்றுநோய்த்தடுப்பு நிபுணர்கள் மற்றும் சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம் அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியிருக்கின்றார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிநிலை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.