துபாயில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்

232 0

201701041043294541_uae-government-seizes-dawood-ibrahim-assets-worth-rs-15000_secvpfதுபாயில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துபாயில் தாவூத் இப்ராகி மின் ரூ. 15ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர் தற்போது இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி ஆக இருக்கிறார்.தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால் அதை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. அதையடுத்து தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை அமெரிக்கா உறுதி செய்தது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி துபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏ.பி.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தாவூத் இப்ராகிமை கேலி செய்து ஒரு சினிமா படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதை நீக்க வலியுறுத்தி தங்களுக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.