தொடரூந்து பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் 30 பேர் உயிரிழப்பதாக தொடரூந்து திணைக்கள பொது முகாமையாளர் பி. ஏ. பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, வருடத்துக்கு இந்த எண்ணிக்கை 360ற்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தொடரூந்து பாதைகளில் நடந்து செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறிச் செல்வோர் கைதுசெயயப்பட்டால், நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.