முல்லைத்தீவு நாகஞ்சோலை வனப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் பல ஆண்டு காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது
முல்லைத்தீவு வட்டார வனக் காரியாலய அதிகாரிகளினால் திடீரென மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பெருந்தொகையான மரக்குற்றிகள், பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்
குறித்த கைப்பற்றப்பட்ட மரங்களின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேல் எனவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வனக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்