முல்லைத்தீவில் ஒரே நாளில் மூன்றாவது கொரோனா உயிரிழப்பு!

151 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 25.08.21 மாலை வரை மூன்று கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளார்கள்

மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

இன்று 25.08.21  மாலை 5.00 மணிவரையிலான மருத்துவமனை தகவலின் படி மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளன மூன்றாவது மரணமாக ஒட்டுசுட்டான் பெரியசாளம்பன் பகுதியினை சேர்ந்த 68 அகவையுடைய முத்துசாமி ஆறுமுகம் என்ற வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இன்று(25) நண்பகல் வரையில் இரண்டு மரணங்கள் பதிவான நிலையில் மாலை வேளையில் மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.