வடக்கில் நேற்று 94 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

158 0

கிளிநொச்சியில் 37 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 33 பேருக்குமாக வடக்கு மாகாணத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம்போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் நேற்று 460 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 98 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பளை மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கும், பளை பிரதேச மருத்துவமனையில் 12 பேருக்கும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 4 பேருக்கும் என 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 14 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 4 பேருக்கும், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் 3 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் இருவருக்கும், சாவகச்சேரி மருத்துவமனையில் இருவருக்கும், சங்கானை பிரதேச மருத்துவ மனையில் ஒருவருக்கும், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு மென 33 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கில் மூவருக்கும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மூவருக்கும், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவருக்குமாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியா பொது மருத்துவமனையில் 5 பேருக்கும், வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், மாமடுவ பிரதேச மருத்துவமனையில் ஒருவரும், செட்டிகுளம் ஆதார மருத்துவ மனையில் ஒருவருமாக 9 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் பொது மருத்துவமனையில் 7 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். தவிர, காங்கேசன்துறை கடற்படை முகாமில் நாவல்வரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.