இலத்திரனியல் அடையாள அட்டைக்கு 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி

241 0

dscn9847இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளினதும் மரபணு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பிரஜைகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு தகுதி பெறுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 60 இலட்சம் என்றும் கூறியுள்ளார்.இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கான சட்டவிதிகளை சட்டமா அதிபர் திணைக்களம் தயாரித்துள்ளது.அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதி இம்மாதம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.