புதுக்குடியிருப்பில் வரும் சனிக்கிழமை தொடக்கம் வர்த்தக நிலையங்களை பூட்ட தீர்மானம்!

232 0

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வர்த்தக நிலையங்களை பூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக நிலையங்களை எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை பூட்டி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க நிர்வாகத்தை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளதாவும் அதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் (21.08.21) எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.08.21 அதிகாலை வரை புதுக்குடியிருப்பில் உள்ள வணிக நிலையங்களை பூட்டி சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை வணிகர் சங்கம் எடுத்துள்ளது.

இன்று நாட்டில் பரவலாக கொரோனா தொற்று ஏற்பட்டு அனைத்து வைத்திய சங்கங்களும் வீதி ஓரங்களில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் மக்களும் வீடுகளில் இருந்து வெளியில் நடமாட்டத்தினை குறைத்துக்கொள்ளுங்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சரியான திட்டமிடல் கிடையாது வைத்திய வசதிகள் இல்லை வைத்திய அதிகாரிகள் குறைவு தொற்று வேகமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியசாலைகளில் இடம் இல்லை ஒட்சிசன் தட்டுப்பாடாக இருக்கின்றது எனவே நாங்கள் இந்த கடைகளை பூட்டியதன் நோக்கம் மக்களின் தேவையற்ற விதமான நடமாட்டத்தினை கட்டுப்படுத்தவே..

மக்கள் இருந்தால் மட்டுமே வர்த்த நிறுவனங்களை திறந்து வியாபாரங்கள் செய்யமுடியும் மக்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு தேவை இதனை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.