கிளிநொச்சி பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (காணொளி)

266 0

kiliகிளிநொச்சி பொன்னநகர் மத்தி 72 வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் தமக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள குடும்பங்கள் குடிநீர், போக்குவரத்துக்கான வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைத்;துக் கொடுக்கப்பட்ட 72 மாதிரி வீட்டுத்திட்டத்தில் உள்ள குடும்பங்கள் தங்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் இதுவரை தங்களுக்கான காணி உரிமங்கள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் புதிதாக திருமணம் செய்த 20 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், தாய் தந்தையருடன் குறித்த 72 வீட்டுத்திட்டத்தில் வசித்து வருவதாகவும் அவர்களுக்கான காணிகளைப் பெற்றுத்தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.