நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்- இரா.சம்பந்தன்

273 0

download-2ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதுவருட நிகழ்வை முன்னிட்டு, இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தமது கடமைகளை உரிய முறையில் செய்ய வேண்டும் எனவும், இந்த வருடம் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடமாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.