சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

252 0

5-47வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே நிதி அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யோசனையில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த வருடத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சரால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு வாகன சாரதிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.